வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழை நீர் ஒழுகியதால் பரபரப்பு

கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த செவ்வாய் கிழமை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழை நீர் ஒழுகியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வந்தே பாரத் ரயிலில் கனமழையால் மழை நீர் ஒழுகியது.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் பிரச்சினையை சரி செய்தனர். வந்தே பாரத் ரயிலுக்குள் மழைநீர் கசிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News