“என்னை மன்னித்துவிடுங்கள்” – நைசாக நழுவிய ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், வரும் 10-ம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வேட்டையன் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்றும், அதனை அப்படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தர்பார் படத்திற்கு பிறகு, முழுநீள போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன் என்றும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இதையடுத்து, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு, காரில் அங்கிருந்து சென்றுவிட்டார்.

RELATED ARTICLES

Recent News