சினிமா
ரஜினிகாந்த் – ஞானவேல் ராஜா படத்தின் கதை இதுதானா? செம சம்பவம் காத்திருக்கு!
அண்ணாத்த படத்தின் படுதோல்விக்கு பிறகு, வெற்றிப் படத்தை கொடுக்கும் முயற்சியில், ரஜினி இருந்து வருகிறார். தற்போது, நெல்சன் இயக்கத்தில் உருவாகும், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, ஜெய் பீம் படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல்ராஜாவுடன், ரஜினி கூட்டணி வைக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் கதை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக, ரஜினி நடிக்க உள்ளாராம். இது போலி என்கவுண்டரை மையமாக உருவாகும் கதையாம். இதுமட்டுமின்றி, ஜெய் பீம் போலவே, இதுவும் உண்மைக் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் கதையாம்.
You must be logged in to post a comment Login