சினிமா
ஜெயிலர் ரிலீஸ் ஆக 2 நாட்களுக்கு முன் ரஜினியின் அதிரடி முடிவு!
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படமாவது பெரிய வெற்றியை பெறுமா? என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், ரஜினிகாந்த் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, இந்தியாவின் மிகவும் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்று இமயமலை.
ஒவ்வொரு முறை திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகும், ரஜினிகாந்த் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், ஜெயிலர் படத்தின் பணிகள் அனைத்தும் முடித்துவிட்டதால், தற்போது இமயமலை அவர் செல்ல உள்ளாராம்.
சில நாட்கள் அங்கு தங்கி, ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு, மீண்டும் தலைவர் 170-ன் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.