Connect with us

Raj News Tamil

“நான் மட்டும்-னு தான் நினைச்சேன்.. ஆனா” – தங்கையின் கணவருடன் உறவு வைத்த பெண்.. இறுதியில் நடந்த கொடூரம்!

தமிழகம்

“நான் மட்டும்-னு தான் நினைச்சேன்.. ஆனா” – தங்கையின் கணவருடன் உறவு வைத்த பெண்.. இறுதியில் நடந்த கொடூரம்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு கௌதமி என்ற மனைவியும், பவானி, நரசிம்மன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முனுசாமி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இதனால், தனியாக வசித்து வந்த கௌதமிக்கும், அவரது தங்கை கணவர் சஞ்சீவிராயனுக்கும் இடையே, கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பணி முடிந்து கௌதமி வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, வழிமறித்த சஞ்சீவிராயன், அவரை இரும்பு ராடால் கடுமையாக தாக்கிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதில், படுகாயம் அடைந்த கௌதமி, பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

அதில், சஞ்சீவிராயன் மட்டுமின்றி பல ஆண்களுடன் கௌதமிக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில், கௌதமி சஞ்சீவராயனிடம் இருந்து பழக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த அவர், கௌதமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள சஞ்சீவிராயனை போலீசார் தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top