செல்ஃபி எடுக்கும்போது.., ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ரசிகர்கள்..

கீதா கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களிலும், சுல்தான், வாரிசு ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா.

அனிமல் படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமான இவர், தற்போது National Crush என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் விமான நிலையத்திற்கு, ராஷ்மிகா வந்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அந்த சமயத்தில், அங்கிருந்த ஒருசில ரசிகர்கள், அவரது கையை பிடித்து, அத்துமீற முயற்சி செய்தனர்.

இதனால் அசௌகரியமாக உணர்ந்த அவர், அங்கிருந்து பொறுமையாக கிளம்பி சென்றுவிட்டார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News