சினிமா
பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதை விட்ட ராஷ்மிகா!
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி சினிமாக்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் தற்போது இந்தியிலும் சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பறப்பதற்கு ஆசைப்பட்ட ராஷ்மிகா இருப்பதை விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்தி நடிகர் ஷாகித் கபுரின் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால், தெலுங்கு படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டு, இந்தி படத்தில் நடிக்க முடிவு செய்தார்.
ஆனால், தற்போது அந்த இந்தி திரைப்படம், பட்ஜெட் பிரச்சனை காரணமாக, கைவிடப்பட்டுள்ளதாம். இது, ராஷ்மிகாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)