Connect with us

Raj News Tamil

ரேஷன் கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்!

தமிழகம்

ரேஷன் கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்!

ரேஷன் கடைகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 23 தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 20,765 நியாய விலைக் கடைகளில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிக்கள் அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பணிக்கு ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement

More in தமிழகம்

To Top