இந்தியா
இராவணன் உருவ பொம்மை எரிக்கும்போது நடந்த அசம்பாவிதம்!
இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஹரியானா மாநிலம் யமுனா நகரில், தசராவின் கடைசி நாளான நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அந்த விழாவில் ராவணனின் உருவ பொம்மை வதம் செய்யப்பட்டது. வதம் செய்யும் நிகழ்ச்சியில், ராவணனின் உருவ பொம்மை எரிந்த போது, அங்கு கூடியிருந்த பொதுமக்களின் மீது விழுந்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
பின்னர் உடனடியாக பொதுமக்கள் மீட்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் பலர் இதில் காயமடைந்தனர்.
You must be logged in to post a comment Login