Connect with us

Raj News Tamil

மனைவியை அனுப்ப மறுப்பு: மாமியாரை குத்தி கொன்ற மருமகன்!

தமிழகம்

மனைவியை அனுப்ப மறுப்பு: மாமியாரை குத்தி கொன்ற மருமகன்!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் கஸ்தூரிபாய் தெருவில் வசிப்பவர்கள் சரவணன் – மகாதேவி தம்பதியினர். இவர்களது 3வது மகளுடன் மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பிரபு தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் அழகாபுரியில் வசித்து வந்துள்ளார்.

பிரபுவிற்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் தனது தாய் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். மனைவியை அழைத்துச் செல்ல பலமுறை வந்துள்ள பிரபுவுடன், தனது மகளை மாமியார் அனுப்ப மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மனைவியை அழைத்துச் செல்ல மாமியார் வீட்டிற்கு வந்த பிரபு இரவில் மாமியார் வீட்டில் தங்கி உள்ளார். அதிகாலை தனது மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்ற போது கண் விழித்த மாமியார் மகாதேவி கூச்சலிட்டு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரை பலமுறை குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து காளையார் கோயில் காவல் நிலையத்தில் சரணடைந்த பிரபுவை கைது செய்த போலீசார், சம்பவ இடம் வந்து கொலை செய்யப்பட்ட மகாதேவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமியாரை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More in தமிழகம்

To Top