தமிழகம்
நிவாரண பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்..!!
கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தற்போது வெள்ள பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன.
இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் நெல்லை உள்பட 4 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு கட்டணமில்லாமல் நிவாரண பொருட்களை அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் நிவாரண பொருட்களை அதிகளவில் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.