அரியானா மாநிலத்தில் கலவரம்..வாகனங்களுக்கு தீ வைப்பு..40 பேர் படுகாயம்

அரியானா மாநிலம் குர்கான் அருகே நுல்ஹர் மஹாதேவ் கோயில் உள்ளது. இங்கு புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகே உள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.

அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினர் தகராறு செய்தாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கைகலப்பு கலவரமாக மாறியது, இதில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 40 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News