மூக்குத்தி அம்மன் 2-ஐ இயக்காதது ஏன்? ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!

ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தை, ஆர்.ஜே.பாலாஜியே தான் இயக்கவும் செய்திருந்தார்.

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ஆனால், இதனை ஆர்.ஜே.பாலாஜிக்கு பதில், சுந்தர் சி இயக்கி வருகிறார்.

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2-ஐ இயக்காதது ஏன் என்று, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த அவர், “2-ஆம் பாகத்திற்கான ஐடியா எதுவும் என்னிடம் இல்லை. நான் வேறு கதைகளில் தான் கவனம் செலுத்தினேன். தற்போது, என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய சுந்தர் சியே இந்த படத்தை இயக்குகிறார்” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News