Connect with us

Raj News Tamil

சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ்…சுற்றி வளைத்த அதிகாரிகள்

தமிழகம்

சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ்…சுற்றி வளைத்த அதிகாரிகள்

ஆருத்ரா மோசடி வழக்கில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த வந்த பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இன்று காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் பிடித்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக அறிவித்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆரூத்ரா கோல்டு நிதி நிறுவன வழக்கில் கைதான ரூஷோ என்பவர் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரூ.12.50 கோடி கொடுத்ததாக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி ஆர்.கே.சுரேஷ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து நாளை மறுதினம் (டிசம்பர் 12ஆம் தேதி) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

More in தமிழகம்

To Top