Connect with us

Raj News Tamil

பட்டபகலில் ஏடிஎம்யில் ரூபாய் 13 லட்சம் கொள்ளை!

தமிழகம்

பட்டபகலில் ஏடிஎம்யில் ரூபாய் 13 லட்சம் கொள்ளை!

சென்னை தாம்பரம் அடுத்த படப்பை பஜார் சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் செல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த வங்கி ஏடிஎம்-க்கு, பணம் நிரப்பும் ஊழியர்கள், கடந்த ஆறாம் தேதி மாலையில், வங்கி ஏடிஎம்மில் ரூ.23,35,300 பணத்தை நிரப்பினர்.

ஏடிஎம்மில் பணம் நிரப்பிய பின்பும், அடுத்த இரண்டு நாட்களில், வாடிக்கையாளர்கள் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை. அனைவருக்கும் ஏடிஎம்மில் பணம் இல்லை என்ற தகவல் வந்தது.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்தனர். இதனால் வங்கி அதிகாரிகள் ஏடிஎம்மை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதபடி, ஏடிஎம் நம்பர் லாக் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.

மேலும், வங்கியின் உயர் அதிகாரிகள், ஏடிஎம் நிபுணர்கள் வந்து, ஏடிஎம்மில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஏடிஎம்-க்கு நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் ஏடிஎம்மை நம்பர் லாக் செய்ததை கண்டுபிடித்தனர்.

அதோடு அதே காரில் வந்த மர்ம நபர்கள் அடுத்த இரு தினங்களில், ரகசிய பின் நம்பர் சிஸ்டத்தை உபயோகித்து முதல் நாளில் ரூ.8,17,200 பணமும், மறு நாள் காலை 9:40 மணிக்கு ரூ.4,86,000 பணமும், மொத்தம் ரூ.13,03,200 கொள்ளையடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அந்த வங்கியின் மேலாளர், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு அந்த ஏடிஎம்மில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top