வேற அணிக்கு செல்லும் ரோஹித், சூர்யகுமார்? அதிர்ச்சி தகவல்..!

ஐ.பி.எல் 2025-ஆம் ஆண்டுக்கான ஏலம் விரைவில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தின்போது, பல்வேறு அணிகளின் கேப்டன்கள் மாற இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. மேலும், சில முக்கிய அணியின் வீரர்கள், வேறு அணிக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு மாறும் சில வீரர்கள் யார்? யாராக இருக்கலாம் என்ற கணிப்புகளும், இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, 2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியின்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

அந்த அணி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இது, போட்டியின்போது அவரது உடல்மொழியிலேயே நன்றாக தெரிந்தது.

இதன்காரணமாக, அடுத்த ஆண்டு நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் அவர் வேறு அணிக்கு விளையாடுவார் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே, சூர்யகுமார் யாதவும் அந்த அணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாகவும், வேறு அணியில் கேப்டனாக பதவி ஏற்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி இருந்தார். இதுமட்டுமின்றி, இந்திய அணியின் T20 போட்டிகளுக்கான கேப்டனாகவும் அவர் பதவி பெற்று இருக்கிறார். இதனால், இவரை தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகம் துடித்துக் கொண்டு இருக்கிறதாம். இவ்வாறு வந்துள்ள தகவல்கள், ஐ.பி.எல். ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

RELATED ARTICLES

Recent News