Connect with us

Raj News Tamil

தலைக்கேறிய கஞ்சா போதை : கையில் அரிவாளுடன் தகராறு..!!

தமிழகம்

தலைக்கேறிய கஞ்சா போதை : கையில் அரிவாளுடன் தகராறு..!!

திருவாரூர் மாவட்டம் கல்யாண மஹாதேவி மேலத் தெரு பகுதியை சேர்ந்த சிவா என்கிற சிவராஜ். இவர் மீது பைக் திருட்டு, அடிதடி, கஞ்சா விற்பனை என பல வழக்குகள் உள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கஞ்சாபோதையில் அரிவாளுடன் கமலாபுரம் கடைத் தெருவுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களை மறித்து அடித்து நொறுக்கியுள்ளார். இதையடுத்து ஒரு டீக்கடைக்குள் நுழைந்தவர் அங்கிருந்த கண்ணாடி உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளார்.

இது தொடர்பாக வடபாதிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவராஜையையும் அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட சந்தோஷ் என்பவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தலைக்கேறிய கஞ்சா போதையில் கண்ணில் பட்டவரை எல்லாம் வெட்டித் தாக்குதல் நடத்திய ரவுடியால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

More in தமிழகம்

To Top