சம்பள உயர்வு கிடைக்கல.. காவல் ஆய்வாளரை கொன்ற கான்ஸ்டபிள்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாண் பகுதியில், ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தவர் பஞ்கச். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது சக காவலர்களிடம் சண்டையிட்டுள்ளார்.

இதனால், இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4 வருடங்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என்றும், ஏற்கனவே வாங்கி வரும் சம்பளம் குறைக்கப்படும் என்றும், உத்தரவிடப்பட்டது.

இதனால் கடும் கோபம் அடைந்த பங்கச், இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த காவல் ஆய்வாளர் கார்கை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, அவர் படை முகாமில் தனியாக இருந்தபோது, கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த பங்கச் -ஐ, அவரது சொந்த ஊரில் கைது செய்தனர்.

RELATED ARTICLES

Recent News