Connect with us

Raj News Tamil

சி.எஸ்.கே வெற்றி தான்.. இருப்பினும் தோனியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

விளையாட்டு

சி.எஸ்.கே வெற்றி தான்.. இருப்பினும் தோனியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில், சி.எஸ்.கே அணிக்கும், கே.கே.ஆர் அணிக்கும் இடையே, ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கே.கே.ஆர். அணி, ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடியது.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புடன், 137 ரன்கள் எடுத்திருந்தது. 138 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 விக்கெட் இழப்புக்கு, 17.4 ஓவரிலேயே, இலக்கை அடைந்து, அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் மூலம், சென்னை அணி தங்களது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. என்னதான், இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தாலும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, அவரது ஹேட்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதாவது, நேற்றைய போட்டியின்போது, முஸ்தபிசுர் ரகுமான் 18-வது ஓவரை வீசியிருந்தார். அந்த ஓவரின் 4-வது பந்தை வீசியபோது, அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரசல், அந்த பந்தை அடித்தார்.

பேட்டில் சரியாக படாத அந்த பந்து, Edge-ஆகி, தோனியிடம் செல்லும். மிகவும் அசால்ட்டான அந்த கேட்சை, தோனி பிடித்துவிடுவார் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், அதனை அவர் தவறவிட்டுவிடுவார்.

இதனை ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்தபோது பார்த்த கேப்டன் ருத்துராஜ் கெய்க்குவாட், பயங்கர அதிர்ச்சியான ரியாக்ஷனை கொடுத்திருப்பார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வருகிறது. ஒருசில நெட்டிசன்கள், தோனியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“தோனியின் கதை முடிந்துவிட்டது. ஒவ்வொரு போட்டியிலும், தோனி தன்னுடைய மரியாதையை இழந்துக் கொண்டே வருகிறார். பேசாமல், அவர் ஐ.பி.எல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம். கௌதம் கம்பீர் இதனை பார்த்தால் சிரிப்பார்” என்று நெட்டிசன் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதேபோல், நிறைய நெட்டிசன்கள், தோனி தவறவிட்ட கேட்ச் பற்றியும், அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும், இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

More in விளையாட்டு

To Top