இந்திய அணிக்கு டிப்ஸ் கொடுத்த சத்குரு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

உலக கோப்பையை இந்திய அணி மீண்டும் வெல்வதற்கு ஈஷா நிறுவனர் சத்குரு ஆலோசனை வழக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது:-

“கிரிக்கெட் ஆடுவது எப்படி என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அதுகுறித்து நான் ஏன் எதாவது சொல்ல வேண்டும்? ஆனால், இப்போது உலகக் கோப்பையை வெல்வது எப்படி என கேட்கிறீர்கள்.

கோப்பையை வெல்ல முயற்சிக்காதீர்கள். வெறுமனே அந்தப் பந்தை மட்டும் சிறப்பாக அடியுங்கள். இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களும் உலக கோப்பை வெல்ல வேண்டும் என ஏங்குகிறார்கள் என்ற எண்ணத்துடன் ஆடினால், நீங்கள் பந்தை தவறவிட்டு விடுவீர்கள் அல்லது உலகக் கோப்பையை வென்றால் கிடைக்கும் விஷயங்கள் குறித்த கற்பனையுடன், ஆடினால் உங்கள் விக்கெட்டை பறிகொடுத்துவிடுவீர்கள். எனவே, உலகக் கோப்பை எப்படி வெல்வது என சிந்திக்காதீர்கள். பந்தை எப்படி அடிப்பது, எதிர் அணியின் விக்கெட்களை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள்” என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News