சினிமா
மீண்டும் மருத்துவமனையில் சமந்தா!அதிா்ச்சியில் ரசிகா்கள்!
மயோசிடிஸ் நோய்க்காக நடிகை சமந்தா தற்போது வெளிநாட்டில் தனது அம்மாவுடன் தங்கி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இருந்தபோதிலும் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா புகைப்படங்கள், ரீல்ஸ் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என பிஸியாகவே இருக்கிறார். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து கையில் ஸ்ட்ரிப் ஏற்றி இருக்கும் புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதற்கான காரணத்தையும் சமந்தா அந்தப் புகைப்படத்திலேயே பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இந்த சிகிச்சை மூலம் , ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, தசை வலிமை, வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன், எலும்புகளுக்கு வலிமை போன்ற பலன்கள் கிடைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இப்பதிவை கண்ட ரசிகா்கள் சமந்தா விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என்று கமென்ட் செய்து வருகின்றனா்.