சினிமா
சோகத்தில் மூழ்கிய சமந்தா – பல கோடி ரூபாய் நஷ்டம்..
தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை சமந்தா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வரும் இவர், சாகுந்தலம் என்ற சரித்திர படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த வாரம் வெளியான நிலையில், பெரும் தோல்வியை சந்தித்தது. முதல் நாளில் ஒன்றரை கோடியை வசூலித்த இந்த படம், நாட்கள் நாட்கள் செல்ல செல்ல வசூலில் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில், இப்படம் இதுவரை 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து, படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுதொடர்பான தகவல், தெலுங்கு மொழி பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன.
You must be logged in to post a comment Login