தமிழகம்
சனாதனம் என்பது தோல்வியடைந்து விட்டது – பெரியார் திடலில் கீ. வீரமணி பேச்சு
சென்னை பெரியார் திடலில் விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா மற்றும் ‘விடுதலை’ 89ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி பேசியதாவது : தென்னாட்டுடைய திராவிடமே போற்றி என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்று திராவிட மாடல் திகழ்கிறது. சனாதனம் என்பது காலவதி ஆகிவிட்டது..தோற்று விட்டது.
தந்தை பெரியாரின் நூல்கள் 21 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பை திராவிட மாடல் ஆட்சி வெளியிட்டது. அப்பணி தற்போது சிறப்பாக மேற்க்கொள்பட்டுள்ளது .விடுதலை நாளிதழ் என்பது காகிதம் அல்ல, அது ஆயுதம் என்றார்
You must be logged in to post a comment Login