“ரொம்ப Sorry” – சந்தோஷ் நாராயணனிடம் மன்னிப்பு கேட்ட அஜித்?

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து கொடுத்தவர் சந்தோஷ் நாராயணன். இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், தனக்கும், நடிகர் அஜித்துக்கும் இடையே நடந்த, சுவாரசியமான சம்பவம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, சந்தோஷ் நாராயணன், விமான நிலையம் சென்றபோது, நடிகர் அஜித் குமாரை சந்தித்தாராம்.

அப்போது, சந்தோஷ் நாராயணன் யார் என்றே தெரியாமல் இருந்த அஜித், அவரிடம் சகஜமாக பேசி உள்ளாராம். அந்த சமயத்தில் திடீரென குறுக்கிட்ட சந்தோஷ் நாராயணனின் மனைவி, அவர் இசையமைத்த படங்கள் குறித்து, அஜித்திடம் கூறினாராம்.

இதனைக் கேட்ட அஜித், மிகவும் வருத்தம் அடைந்து, மன்னிப்பு கேட்டாராம். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், அஜித்தின் இந்த குணத்தை பாராட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News