சினிமா
ஹூட்டிங்-யை நிறுத்திய சரத்குமார்..! கோபத்தில் படக்குழு..!
பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். திகில் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முன்னதாக ஹூட்டிங்கின் போது இரவு 11 மணிக்கு மேல் என்னால் நடிக்க முடியாது என நடிகர் சரத்குமார் படக்குழுவிடம் கூறியுள்ளார்.
ஆனால் படத்தின் ஒரு சில காட்சிகளை அமைக்க 11 மணிக்கு மேல் ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த அவர், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பாதியிலே சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. இதனால் படக்குழுவும் மிகுந்த கோபத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login