Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த சசிகுமார்! அடுத்த அதிரடி முடிவு!

சினிமா

மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த சசிகுமார்! அடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் சசிகுமார். இருப்பினும், சரியான பட வாய்ப்புகள் அமையாததால், வெற்றி பெற முடியாமல் தவித்து வந்தார். இந்த சமயத்தில் தான், இவரது அயோத்தி திரைப்படம் வெளியாகி, பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் சந்தோஷத்தில் இருக்கும் சசிகுமார், அடுத்த அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இயக்கிய குற்றபரம்பரை என்ற நாவலை, திரைப்படமாக எடுக்க உள்ளாராம்.

மிகவும் பிரபலமான நாவலாக அறியப்படும் குற்றப்பரம்பரையை எடுப்பதற்கு, இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா ஆகியோர் முயற்சி எடுத்தனர். ஆனால், அவர்களால் அந்த படைப்பை திரைப்படமாக எடுக்க முடியவில்லை.

தற்போது, சசிகுமார் அந்த நாவலை திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும், விஜயகாந்தின் மகன் சன்முக பாண்டியன் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரமணியபுரம் என்ற தரமான திரைப்படத்தை இயக்கிய இவர், நீண்ட நாட்களுக்கு பிறகு, இயக்குநராக அறிமுகமாக இருப்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top