Connect with us

Raj News Tamil

சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? நாளை விசாரணை

அரசியல்

சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? நாளை விசாரணை

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை தற்போது அக்கட்சியினர் நாடியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top