Connect with us

Raj News Tamil

பட்டப்பகலில் பள்ளி மாணவன் வெட்டி கொலை! – 17வயது சிறுவன் கைது!

தமிழகம்

பட்டப்பகலில் பள்ளி மாணவன் வெட்டி கொலை! – 17வயது சிறுவன் கைது!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரணவ் (17) என்ற பள்ளி மாணவர் அதே பகுதியில் உள்ள ஒரு மருந்து கடை முன்பாக தனது தோழியுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர், பிரணவின் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் சரமாரியாக அரிவாளால் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த மாணவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீஸார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவனை வெட்டி விட்டு தப்பி ஓடிய அந்த மர்ம நபர், சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளரிடம் சரணடைந்துள்ளார்.

இதையடுத்து அவரை சூலூர் காவல்துறையினர் சிங்காநல்லூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் பேரரசு (17) என்பதும், சிங்காநல்லூர் டெக்ஸ்டைல் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

எதற்காக இந்தக் கொலை சம்பவம் நடந்தது என்பது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் கூட்டம் அதிகம் மிகுந்த பிரதான சாலையில் நடந்த இந்தக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top