Connect with us

Raj News Tamil

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி..!

தமிழகம்

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார்(10), துரைப்பாண்டி(13) ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

கரையிலேயே குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் ஆழம் தெரியாமல் ஆற்றில் இருந்த பள்ளத்தில் உள்ள நீரில் மூழ்கியுள்ளனர். குளிக்கச் சென்ற சிறுவர்கள் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்துள்ளனர். உறவினர்களே ஆற்றில் இறங்கி சிறுவர்களை தேடி உடல்களை மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குளிக்க சென்ற இந்த சம்பவத்தால் அந்த கிராமமும் மிகுந்த சோகத்தில் உள்ளது.

More in தமிழகம்

To Top