Connect with us

Raj News Tamil

ஓய்வு பெறும் நாளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்!

தமிழகம்

ஓய்வு பெறும் நாளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்!

புதுக்கோட்டை அருகே, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தங்கராஜ். மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர், இன்று ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனையொட்டி, அவரை வழியனுப்பி வைக்கும் விழா, பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட தங்கராஜ், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவ-மாணவியர்கள் ஆயிரம் பேருக்கு, மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார். இவரது இந்த செயல், சக ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top