அரசியல்
விஜய் அரசியலுக்கு வந்தால் இந்த மண் வலிமையாக இருக்கும் – சீமான் பேட்டி
விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் தான் என்னை ஆதரிக்க வேண்டும். நான் அவரை ஆதரிக்க மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்…
பல்வேறு நிகழ்வுகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவே இதை செய்கிறாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சீமான் “விஜய் அரசியல் கட்சி தொடங்கவே இது போன்ற முயற்சிகளை செய்து வருகிறார். அதை நான் வரவேற்கிறேன்.விஜய் அரசியலுக்கு வந்தால் இந்த மண் வலிமையாக இருக்கும். நான் மட்டுமே எல்லா பக்கத்திலும் இருந்து சண்டை செய்ய முடியாது. அவர் வந்தால் ஆதரவாக இருக்கும். விஜய் அரசியலுக்கு வந்தால் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும். நான் அவரை ஆதரிக்க மாட்டேன்” என கூறினார்.
You must be logged in to post a comment Login