மாணவர்களை சேற்றில் மண்டியிட வைத்து, தடியால் அடித்து உதைத்த சீனியர் மாணவர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய மாணவர் படையான என்.சி.சி.யைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை சீனியர் மாணவர் ஒருவர், கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்து தடியால் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகில் உள்ள தானேவில் உள்ள ஒரு கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டபோது அவர்களில் நான்கு பேர் தவறு செய்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அந்த 4 மாணவர்களையும் பயிற்சி நடைபெறும் மைதானத்தில் சேற்றில் மண்டியிட வைத்து, சீனியர் மாணவர் ஒருவர் தடியால் தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த சீனியர் மாணவர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இது குறித்து அக்கல்லூரி முதல்வர் சுசித்ரா நாயக் கூறுகையில், இது போன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்தது கிடையாது. என்.சி.சி. மாணவர்களை அடித்தது எங்களது கல்லூரி மாணவர் கிடையாது. அவர் எங்களது நிர்வாகத்தில் உள்ள மற்றொரு கல்லூரியை சேர்ந்தவர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News