முடிவுக்கு வரும் செந்தில் பாலாஜியின் வழக்கு? சென்னை உயர்நீதிமன்றம் கூறியது என்ன?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஒரு வருடமாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து வந்தது. மேலும் வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News