முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 52-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறை மருத்துவமனையில் இருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.