Connect with us

Raj News Tamil

நடுவானில் பாலியல் தொந்தரவு : 24 வயது மருத்துவரை சீண்டிய பேராசிரியர்!

இந்தியா

நடுவானில் பாலியல் தொந்தரவு : 24 வயது மருத்துவரை சீண்டிய பேராசிரியர்!

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, 24 வயது பெண் மருத்துவரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட 47 வயது பேராசிரியரை, விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு மும்பைக்குப் புறப்பட்ட விமானத்தில் 24 வயது பெண் மருத்துவர் பயணித்துள்ளார். அவரது அருகில் அமர்ந்திருந்த 47 வயது பேராசிரியர், பெண் மருத்துவரை தவறான நோக்கத்துடன் தொட்டதாக தெரிகிறது.மும்பை விமான நிலையத்தில் இது குறித்து அந்த பெண் சக பயணிகளிடம் கூறியுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உடன் பயணித்த சக பயணிகள் இருவரையும் சமாதானம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அப்பெண் அருகே உள்ள சஹர் காவல் நிலையத்திற்கு சென்று பேராசிரியரின் செயல் குறித்து புகாரளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியரைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top