Connect with us

Raj News Tamil

6 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை! – குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை!

தமிழகம்

6 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை! – குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைசேர்ந்தவர் ஜஹாங்கீர். இவர் சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் ரூம் பாயாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு வந்திருந்த ஜஹாங்கீர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து சிறுவனின் தாய் இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜஹாங்கீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவகங்கை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளி ஜஹாங்கிருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

More in தமிழகம்

To Top