சினிமா
தமிழ் திரையுலகின் ஷாருக்கான் அர்ஜுன் தாஸ் -வனிதா விஜயகுமார் !
தமிழில் அங்காடித்தெரு, ஜெயில் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் வசந்த் பாலன். இவர் தற்போது கைதி ,மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் ,சார்பட்டா நடிகை துஷாரா விஜயன் ஆகிய இருவரையும் வைத்து அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் ,அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , ஜி.வி .பிரகாஷ்குமார் இசையில் ஜூலை 21 ஆம் தேதி அன்று வெளிவரவுள்ளது.
இயக்குநர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.இந்நிலையில் ,அநீதி பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது, “இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. ‘அநீதி’ படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்” என்று தெரிவித்துள்ளார்.