தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரது மகளான அதிதி, விருமன் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு படங்களில், கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஷங்கரின் மகனும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். அதாவது, பிரபு தேவா புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
அந்த படத்தில் தான், ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். தற்போது, ஏ.ஆர்.முருகதாஸின் படங்களில், அர்ஜித் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.