Connect with us

Raj News Tamil

அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் ! தானாக முன்வந்து சரணடைந்த கிரிக்கெட் வீரர்!

விளையாட்டு

அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் ! தானாக முன்வந்து சரணடைந்த கிரிக்கெட் வீரர்!

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேனநாயகே, கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சித்ர சேனநாயகே.இவர் கடந்த 2020ம் ஆண்டு இலங்கை பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது, மேலும் 2 வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க முயற்சித்ததாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு நீதிமன்றம், சசித்ர சேனநாயகேவுக்கு 3 மாதங்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்தது. இந்நிலையில் நேற்று விளையாட்டு ஊழல் விசாரணை குழுவிடம் சசித்ர சேனநாயகே சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த ஊழல் விசாரணை குழுவினர், கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இலங்கையில் மேட்ச் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாக 2019ல் சட்ட விதி மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி கைது செய்யப்பட்ட சேனநாயகே இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டி, 49 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 24 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். சேனநாயகே சூதாட்டத்தில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top