Connect with us

Raj News Tamil

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 22 பேர் பலி: 55 பேர் படுகாயம்!

உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 22 பேர் பலி: 55 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் மெய்ன் நகரில் லூயிஸ்டன் எனும் பகுதியில் ஒரே நேரத்தில் உணவகம், வால்மார்ட் விநியோக மையம், மதுபான விடுதி எனப் பல இடங்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், அப்பகுதிகளில் கடைகளை அடைக்கவும், மக்கள் வீட்டை பூட்டிவிட்டு உள்ளேயே இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வீட்டின் அருகில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் நடந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More in உலகம்

To Top