தமிழகம்
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை…நோயாளிகள் அவதி
செங்கம் அரசு பொது மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 6 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் சுமார் 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டது. விபத்தில் காயம் ஏற்பட்ட மாணவி ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரு மணிநேரமாக காத்திருந்தும் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாத சூழல் ஏற்பட்டது
அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் உள்ளதாக கூறிவரும் சுகாதாரத்துறை அமைச்சர் செங்கம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பாரா என செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.