ஏ.ஆர்.முருகதாஸ்-க்கு வந்த புதிய சிக்கல்!

ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என்று பல்வேறு ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படங்களுக்கு பிறகு, இவர் இயக்கிய சர்க்கார் படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், தர்பார் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது.

இதனால், நீண்ட நாட்கள் படங்கள் இயக்காமல் இருந்த முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். மேலும், சல்மான் கானை வைத்து, இந்தி திரைப்படம் ஒன்றையும் அவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர் திரைப்படங்களில் பங்கேற்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிக்க இருந்த சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பிற்காக, மிகப்பெரிய தாராவி செட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவரால், அந்த படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர், என்ன செய்வது என்று தெரியாமல், கடும் குழப்பத்தில் உள்ளார்களாம்.

RELATED ARTICLES

Recent News