சினிமா
சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரு பாலிவுட் நடிகை.. ஒரு தமிழ் நடிகை..
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்திற்கு பிறகு, நடிகர் சிம்புவை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
சரித்திர கால கதையம்சத்தை கொண்ட இந்த திரைப்படம், பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிகள் யார் என்பது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இப்படத்தில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும், தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ்-ம், இணைந்து நடிக்க உள்ளார்களாம். இந்த தகவலை அறிந்த சிம்பு ரசிகர்கள், மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.