தமிழகம்
“பாலியல் வன்கொடுமை செஞ்சாரு” – கூலிப் படை ஏவி கொன்ற சகோதரிகள்! ஆனால் இறுதியில் செம ட்விஸ்ட்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நாச்சுழியேந்தல் பகுதியை சேர்ந்தவர் இந்திரா. இவருக்கு அலெக்ஸ் பாண்டியன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், இந்திராவின் மகன் அலெக்ஸ் பாண்டியன், கடந்த 30-ஆம் தேதி அன்று, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். அதில், பெற்ற தாயும், சகோதரிகள் 2 பேரும் சேர்ந்து தான், அலெக்ஸ் பாண்டியனை கூலிப் படை ஏவி கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.
மேலும், முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், இவ்வாறு செய்தோம் என்று அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். ஆனால், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தான், உண்மையான காரணம் என்ன என்பதை, குற்றவாளிகள் ஒப்புக் கொண்டனர்.
அதாவது, குடும்ப சொத்துக்கள் அனைத்தும், தன்னுடைய இரண்டு மகள்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று இந்திரா நினைத்துள்ளார். எனவே, தன்னுடைய மகன் அலெக்ஸ் பாண்டியன் உயிருடன் இருக்கக் கூடாது என்று முடிவு செய்த அவர், கூலிப்படையை ஏவி, சொந்த மகனையே கொலை செய்துள்ளார்.
You must be logged in to post a comment Login