Connect with us

Raj News Tamil

தலையில் துண்டு போட்ட நடிகர் சிவகார்த்திகேயன்..! என்ன ஆச்சு..?

சினிமா

தலையில் துண்டு போட்ட நடிகர் சிவகார்த்திகேயன்..! என்ன ஆச்சு..?

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று, இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

இந்த பேட்டியின் மூலம், சிவகார்த்திகேயனின், இமேஜ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் டேமேஜ் ஆனது.

இருப்பினும், மனம் தளராமல் இருந்த சிவகார்த்திகேயனுக்கு, அதிர்ச்சி அளிக்கும் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை, நடிகர் கமல் ஹாசன் தான் தயாரித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு அதிக செலவாகிவிட்டது என்றும், இனிமேல் செலவு செய்ய முடியாது என்றும், கைவிரித்துவிட்டதாக, தகவல் கசிந்துள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள், சிவகார்த்திகேயனுக்கு, சோதனை மேல் சோதனை வந்துக் கொண்டே இருக்கிறது என்று வருத்தம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top