தளபதி பட்டம் குறித்த கேள்வி! மாஸ்-ஆக பதில் அளித்த சிவகார்த்திகேயன்!

விஜய் நடித்த தி கோட் படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். அந்த காட்சியின்போது, “நான் ஒரு முக்கியமான வேலைக்கு போறேன்.. நீங்க இத பாத்துக்கோங்க” என்று கூறும் விஜய், தன் கையில் இருக்கும் துப்பாக்கியை, சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார்.

அதாவது, அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்பதை உணர்த்தும் வகையில், அந்த காட்சியை எடுத்திருந்தார்கள். இதனால், ஒருசிலர் இதற்கு ஆதரவாகவும், ஒருசிலர் எதிராகவும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், அமரன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயனிடம், துப்பாக்கியின் கனம் எப்படி இருக்கு என்று சூதகமாக கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், “துப்பாக்கி எப்போதும் கனமாக தான் இருக்கும். நாம் தான் அதனை சரியான முறையில் கையாள வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News