Connect with us

Raj News Tamil

மீண்டும் பழைய அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா!

சினிமா

மீண்டும் பழைய அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா!

தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முடித்துள்ள இவர், தெலுங்கு மொழிகளிலும், பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மீண்டும் திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கில்லர் என்ற படத்தை எழுதி முடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், இப்படத்தை இயக்கி, தயாரிக்கவும் உள்ளார்.

இது த்ரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும், இப்படத்தில் வித்தியாசமான கார் ஒன்று முக்கிய அங்கம் வகிக்க உள்ளது என்றும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top