இந்தியா
நடுவானில்.. சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. என்ன நடக்கிறது நம் நாட்டில்?
விஸ்தாரா ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று, டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டது.
நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது, சிறுமி ஒருவரை, அங்கிருந்த ஆண் பயணி ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் தந்தை, நடுவானிலேயே, ஆண் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்த, வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்று விமர்சித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login