Connect with us

Raj News Tamil

ரயில் நிலையத்தில் கிடந்த சிறு பெட்டி.. திறந்து பார்த்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. செம காமெடிப்பா..

தமிழகம்

ரயில் நிலையத்தில் கிடந்த சிறு பெட்டி.. திறந்து பார்த்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. செம காமெடிப்பா..

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில், சிறிய பெட்டி ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த பெட்டியை எடுத்து பார்த்துள்ளனர்.

அது பார்ப்பதற்கு தங்க நகைகள் வைக்கும் பெட்டி போல இருந்ததால், உள்ளே தங்கம் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அந்த பெட்டியின் உள்ளே, சில டைல்ஸ் கற்கள் மட்டுமே இருந்துள்ளது. மேலும், அதனுள்ளே இருந்த கடிதத்தை எடுத்து, காவல்துறையினர் படித்துள்ளனர்.

அதில், “அடுத்தவர்களின் சொத்துக்கு ஆசைப்படும் உங்களை போன்ற கேவலமானவர்கள், இந்த உலகத்தில் இருக்க தகுதியற்றவர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

யாரே குறும்புக்கார நபர் இவ்வாறு செய்திருப்பதை அறிந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், யார் இவ்வாறு செய்தனர் என்பதை விசாரித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் கிடந்த சிறு பெட்டியால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top