தமிழகம்
செங்கல் சூளையில் இருந்து புகை.. பொதுமக்கள் பாதிப்பு..
நாகை அருகே முறையான அனுமதி பெறாமல் துவங்கப்பட்ட செங்கள் சூளையை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள ராவாஞ்சேரியை சேர்ந்தவர் ஜான் பாஸ்கர். இவர் தனக்கு சொந்தமான இடத்தில், செங்கல் சூளை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகை, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, துறை ரீதியான அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வரும் இந்த செங்கல் சூளையை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login